Thursday, August 12, 2010

மார்க்கத்தின் மகிமை

அஸ்ஸலாமு அலைக்கும்




மார்க்கத்தின் மகிமை..



அறிவுரைகள் எல்லாம்

அடுத்தவருக்குத்தான்;

எதிர்த்துக் கேள்விக் கேட்டால்

எரிமலையாய் வெடித்திடுவோம்!



விளக்கம் கொடுப்பதற்கு முன்னமே

குதர்க்கமாய் கனைகள் தொடுத்திடுவோம்;

கிடைத்ததற்கு பின்னே

கிண்டலாய் முடித்திடுவோம்!!



செய்தவை யாவையும்
செய்தித்தாளில் போட்டு விடுவோம்;

செய்தவர் யாரென்று அதிலும்

போட்டியிடுவோம்!!



ஓரிறையென்று
ஓயாது ஒலித்திடுவோம்;

உள்ளே வந்தப்பின்னே
உனக்கா எனக்கா என
ஒருக் கைப்பார்த்திடுவோம்!!



ஒன்றுப் பட்ட சமுதாயம் என

ஓங்கி ஓங்கி முழங்கிடுவோம்;

விளக்கம் என்றுக் கேட்டால்
குறுந்தகடு வழங்கிடுவோம்!!



ஒன்றாகவே முடியாதா

ஓர் தலைமையில்;

கேட்டதுத்தான் தாமதம்

இடிவந்து விழும் தலையில்!!



இணக்கம் என்றால் கட்டிக்கொள்வோம்

பிணக்கு என்றால் முட்டித்தள்ளுவோம்!

மார்க்கம் என்று மாறி மாறி அழைத்திடுவோம்;

தர்க்கம் செய்தே சேற்றை மாறி மாறி பூசிடுவோம்!



கட்டியணைத்து வெட்டிவிடுவோம்
பகைமையை;

மார்தட்டி சொல்லுவோம்
மார்க்கத்தின் மகிமையை!!



இயக்கமாக இருந்தாலும்

இணக்காமாக இருந்திடுவோம்;

எரிமலையாக இருப்போம்
எதிரிக்கு மட்டும்;

No comments: