Thursday, August 12, 2010

மரணம் ஒன்றே....

வெடிக்கின்ற சப்தத்தால்

வடிக்கின்ற விழிகள்;

காலங்கள் ஆனாலும்

காயம் மட்டும் ரணமாய்
காதோடு முணு முணுக்கும்!!



உறைந்தாலும் இரத்தம்

உறங்காது எங்கள்
உரிமைக் குரல்!!



எங்களை துரத்தாத நாடில்லை

தடுக்க எந்த நாதியும் இல்லை;

வெற்றுக்காகிதத்தில்
வெள்ளை மாளிகை அறிக்கை;

தீராத உன் வேட்கை!!



கயவர்கள் கரம் கோர்த்து

கண்டன அறிக்கை;

புறம் பார்க்க
புறம் தள்ளினாய்

புர்க்காவை!



வறண்டுப் போன வாயினில்
என் தாடிக்காக
உன் தொண்டைக் குழியில்

எச்சில் ஏறி இறங்கும்;



மனம் நிறைய
பயம் கொண்டு
ஏளனமாய் நகைக்கிறாய்

ஏகாதிபத்திய அரசு என்று!!



வார்த்தைக்கு வார்த்தை
வல்லரசு – இனி

வரலாறு மட்டும்தான் அப்படி;

வாசிக்க இருக்க மாட்டாய் நீ!!



அடக்கிவிடலாம் என

ஆணவத்தில் நீ;

இறை வழியில்
மரணம் ஒன்றே

மறுத் தீர்வாய் நாங்கள்!!



ஒயாது இந்த போராட்டம்

ஒய்வெடுக்கும் நாள் வரும் வரைக்கும்;

இரத்தத்தோடு யுத்தகளத்தில் நின்றாலும்

மண்டியிடுவது என்னவோ நாங்கள்
மறையோன் ஒருவனுக்குத்தான்!!

No comments: