Thursday, August 12, 2010

பாலையில் நீ......

மணம் வீசும்




மண வாழ்வில்



மணாளனாய் நீ எனக்கு;







வெட்கம் தீர்வதற்கு முன்னமே



தீர்ந்துவிட்டது உன் விடுப்பு;







சுற்றம் சூழ



தவிக்கவிட்டு சென்றுவிட்டாய்



பாலைக்கு!







வீங்கிய இமைகளும்



தூங்க மறுக்க;



சாயம் போகா மருதாணியும்



புதுப்பெண் என்ற பட்டமும் இன்னும் எனக்கு!!



மருந்தாய் உன் குரல் மட்டும்;



விருந்தாய் உனக்கொரு செய்தி;







சிக்கிய எச்சிலோடும்



சிணுங்கிய கண்களோடும்



இல்லாத வார்த்தைகளால்



சொல்லாமல் நான் தவிக்க;



வருட வேண்டிய நீயோ



வருத்தெடுத்துவிட்டாய் வார்த்தைகளால்;



யோசித்துவிட்டு அழைப்புக் கொடு என்று!!







புன்னகையைக் கூட



பூக்கிறேன் என்றதுக்கு பின்தான்



புரிந்துக்கொள்ளும் தூரத்தில்



நீயும் நானும்!!







கேட்டது கிடைக்கும் மசக்கையில்



என்று யாரோ சொல்ல;



கேட்டேன் உன்னை ஒரு முறை வா என்று!!











இதோ இதோ என்று



இன்னொரு வருடமும் ஒடிவிட்டது;



என் மனமும் ஒடிந்துவிட்டது!!







எங்களை வாழ வைப்பதாக எண்ணி



பாலையில் நீ;பாதியில் நம் உறவு;







நீயிருந்தும் முதிர்க்கன்னியாக நான்



காய்ந்துப் போன மனதுடன்



தீய்ந்துப் போன வயதுடன்



இறுதிவரை இருந்திருக்கலாம் மகளாக



என் பெற்றோருக்கு!!

No comments: