Thursday, August 12, 2010

தயக்கத்திலே....

பேசும் பொழுதெல்லாம் உன்




அழுகைச் சப்தம் என்னை

பேசாமல் செய்யும்!







ஆறுதல் சொல்லிச் சொல்லி



ஆண்டுகள் பல ஒடிவிட்டன!







முடித்துவிட்டு வந்துவிடு என



முத்தமிட்டுச் சொன்னப் போதும்;



அடக்கி வைத்த அழுகை மட்டும்

அடங்காமல் காட்டிக் கொடுக்கும்!!







தூங்கிய வயிறும் வீங்கிவிட;



காதோடு நீ சொல்ல வெட்கப்பட்டதை

கைப்பேசியில் கண்ணீருடன் கதைத்தாய்!!







குழந்தைக்குப் பரப்பரப்பாய்

பெயரினை நான் தேட;



நீயோ உன் பத்தாம் மாத்திற்கு

என் விடுப்பை விரல் விட்டு

எண்ணிக் கொண்டிருந்தாய்!!





உன் இடுப்பு வலிக்கு

நான் இங்கு துடியாய் துடித்தேன்;



வியர்த்த உள்ளங்கையுடன்



என் விரல் கைப்பேசியில்;







ஒருகாலத்தில்

இனிப்புடன் என் நண்பர்கள்;



இழித்துவிட்டு இனிப்பைக் கடித்துவிட்டு



கடுப்பேற்றிப் பார்ப்பேன் அவர்களை;



குழந்தைக்காக இனிப்பா என்று!!







அனைத்தையும் எண்ணிப்பார்க்க

நேரமில்லாமல் நான்;



இன்று கடை கடையாய் ஏறிக்கொண்டிருந்தேன்;



இனிப்புகள் வாங்க!!







அரை மயக்கத்திலும்



அச்சு பிசாகமல் கேட்டாய்;



வரவில்லையா இன்னும்;



பதில் சொல்வதற்குள்

மீண்டும் சென்றுவிட்டாய் மயக்கத்திலே;



கைப்பேசியை துண்டித்துவிட்டு

காரணம் சொல்லமுடியாமல் நான் தயக்கத்திலே!!!

No comments: