Thursday, August 12, 2010

பாலைவனத் தூது

•வ‌யி‌ற்று‌க்கு ஏ‌ற்ற நா‌ர‌த்த‌ங்கா‌ய்
•காங்கோவின் ஐ.நா., அமைதிப்படை கமாண்டராக இந்திய ராணுவ அதிகாரி நியமனம்
•கஷ்மீரில் ராணுவம் வாபஸ் பெறுவது குறித்து ஜூலை 13-க்குப் பின் பரிசீலனை
•ஸ்ரீநகர்:ஊரடங்கு மற்றும் ஊடக கட்டுப்பாட்டால் 2 நாட்களாக பத்திரிக்கைகள் வெளிவரவில்லை!
•இஸ்ரேலின் அணு ஆயுத கொள்கை மீதான தனது நிலைப்பாட்டை அமெரிக்கா தெளிவுபடுத்த வேண்டும்௦௦- அஹ்மதி நிஜாத்
•இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவோரை தண்டிக்க புது சட்டம்
•பெண் அதிகாரியுடன் கைகுலுக்க மறுத்த முஸ்லிம் இளைஞருக்கு பிரெஞ்சு குடியுரிமை நிராகரிப்பு
•பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 19 பேர் பலி
•பெங்களுர் குண்டுவெடிப்பு வழக்கு: மதானியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
•முழு முகமாற்று அறுவை சிகிச்சை - ஃபிரான்ஸ் டாக்டர் சாதனை
•7/11 மும்பை இரயில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: குற்றவாளியை அடையாளம் காண்பதில் முக்கிய சாட்சிகள் தோல்வி
•துளசிராம் வழக்கில் ராஜஸ்தான் டி.ஜி.பி.யின் உதவியை நாடும் குஜராத் போலீஸ்
•சி.பி.ஐ விசாரணைக் கோரும் ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டர் வழக்கு
•மதுரை மாநகரில் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடும் காவல்துறையை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம்
•கேரள பேராசிரியர் மீதான தாக்குதல்: PFI மீது புகார் - சுதந்திரதின அணிவகுப்பை தடுக்கும் மறைமுக யுக்தி
வ‌யி‌ற்று‌க்கு ஏ‌ற்ற நா‌ர‌த்த‌ங்கா‌ய்

Posted: 10 Jul 2010 09:09 PM PDT

நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்தவடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம்.

நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊறவை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்லபல‌ன் தரு‌ம்.

நார‌த்தை பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வர உட‌ல் வெ‌ப்ப‌த்தை போ‌க்‌கிகு‌ளி‌ர்‌ச்‌சி தரு‌ம். வா‌ந்‌தியையு‌ம், தாக‌த்தையு‌ம் த‌ணி‌க்கு‌ம்.

நார‌த்த‌ங்கா‌ய் இலைகைள நர‌ம்பு ‌நீ‌க்‌கி ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி, அதனுட‌ன் வெ‌ள்ளை உளு‌ந்த‌ம் பரு‌ப்பு, கடலை‌ப் பரு‌ப்பு, தே‌ங்கா‌ய் துருவ‌ல் வறு‌த்து சே‌ர்‌த்து ‌மிளகா‌ய், உ‌ப்பு, பு‌ளி, பெரு‌ங்காய‌ம், க‌றிவே‌ப்‌பிலையு‌ம் சே‌ர்‌த்து துவையலாக அரை‌த்து சாத‌த்துட‌ன் ‌பிசை‌ந்து சா‌ப்‌பிடலா‌ம்.

இ‌ப்படி சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌ம் குறையு‌ம்.க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் நா சுவை‌யி‌ன்மை, கும‌ட்ட‌ல், வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். ப‌யி‌‌ன்‌மை குறை‌ந்து ந‌ன்கு ப‌சி‌க்கு‌ம்.

பொதுவாக உணவுட‌ன் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் சே‌ர்‌த்து‌க் கொ‌ண்டா‌ல் செ‌ரியாமை ‌பிர‌‌ச்‌சினை வரவே வராது.

சா‌ப்‌பி‌ட்டது‌ம் ஏ‌ப்ப‌ம் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம், ‌‌ஜீரணமாக நெடுநேர‌ம் ஆனாலு‌ம் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகாயை சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடனடி பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.

வ‌யி‌ற்‌றி‌ல் வாயு‌ப் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் ‌நிலை‌யி‌ல் ஒரு ஊறுகா‌ய் து‌ண்டை எடு‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று ‌தி‌‌ண்ணா‌ல் வாயு‌க் கோளாறு ‌விரை‌வி‌ல் ‌நீ‌ங்கு‌ம்.





காங்கோவின் ஐ.நா., அமைதிப்படை கமாண்டராக இந்திய ராணுவ அதிகாரி நியமனம்

Posted: 10 Jul 2010 08:54 PM PDT

காங்கோ நாட்டுக்கான ஐ.நா., அமைதிப்படை கமாண்டராக இந்திய ராணுவத்தின் லெப்டினென்ட் ஜெனெரல் சந்தர் பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் பான்-கி-மூன் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். தற்போது,இந்தியாவுக்கான ஐ.நா. அமைதி நடவடிக்கைக் குழுவின் பொறுப்பாளராக உள்ளார் பிரகாஷ்.

இந்திய ராணுவத்தில் 1973-ம் ஆண்டு பணியில் சேர்ந்த பிரகாஷ், கடந்த 37 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். ஈரான்-ஈராக் நாடுகளுக்கான ஐ.நா. ராணுவ கண்காணிப்புக் குழுவில் உயர் அதிகாரியாகவும் பிரகாஷ் பணியாற்றியுள்ளார்.

காங்கோவில் தற்போது 18,884 ராணுவத்தினரும், 1,233 போலீஸாரும் பணியில் உள்ளனர். இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாள நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் அடங்குவர்.

இதுவரை காங்கோவில் ஐ.நா. அமைதிப்படை கமாண்டராக செனகல் நாட்டைச் சேர்ந்த பபாகர் கயே பணியாற்றி வந்தார்.

காங்கோவில், சுகாதார மேம்பாடு, பாலம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளில் இந்திய வீரர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.





கஷ்மீரில் ராணுவம் வாபஸ் பெறுவது குறித்து ஜூலை 13-க்குப் பின் பரிசீலனை

Posted: 10 Jul 2010 08:45 PM PDT

கஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறுவது குறித்து ஜூலை 13-ம் தேதிக்குப் பிறகு பரிசீலிக்கப்படும் என்றார் அந்த மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா.

கஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் போராட்டம் வெடித்ததால் அங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தின் உதவியை நாடினார் முதல்வர் ஒமர் அப்துல்லா.

இதையடுத்து கஷ்மீர் பள்ளத்தாக்கில் பிரச்னைக்குரிய பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அந்த மாநில பிரதான எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஒமர் தலைமையிலான அரசுக்கு கஷ்மீர் சூழலை கையாள திறமை இல்லை என்று விமர்சித்துள்ளது.

இந்நிலையில் ஒமர் அப்துல்லா, ஸ்ரீநகரில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, கஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் ராணுவத்தை வாபஸ் பெறும் திட்டம் அரசிடம் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ஒமர் அப்துல்லா, ராணுவத்தை வாபஸ் பெறும் திட்டம் அரசிடம் உள்ளது.இதுகுறித்து ஜூலை 13-ம் தேதிக்குப் பின்னரே பரிசீலிக்கப்படும்.காஷ்மீரில் டோக்ரா ஆட்சிக்கு எதிரான போரில் உயிரிழந்தவர்களின் நினைவுதினம் ஜூலை 13-ல் அனுசரிக்கப்படவுள்ளது. அதுவரை ராணுவத்தை வாபஸ் பெறுதல் குறித்து முடிவெடுக்க முடியாது என்றார்.

கஷ்மீர் பள்ளத்தாக்கில் விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் மட்டுமே ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.நகர்ப்புற பகுதியில் ராணுவ வீரர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்தவில்லை.

போராட்டக்காரர்களுக்கு எதிராக நேரடி நடவடிக்கையிலும் ராணுவம் ஈடுபடவில்லை. கொடி அணி வகுப்பு மட்டுமே நடத்துகிறது என்று ஒமர் அப்துல்லா மேலும் தெரிவித்தார்.





ஸ்ரீநகர்:ஊரடங்கு மற்றும் ஊடக கட்டுப்பாட்டால் 2 நாட்களாக பத்திரிக்கைகள் வெளிவரவில்லை!

Posted: 10 Jul 2010 08:29 PM PDT

ஸ்ரீநகர் கஷ்மீரின் கோடைகாலத் தலைநகர் ஸ்ரீநகரில் மக்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாகவும், பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகள் ரத்து செய்யப்பட்டதாலும் 2 நாட்களுக்கு அங்கு எந்த பத்திரிக்கையும் வெளிவரவில்லை.

டெல்லியில் இருந்து அழைத்துவரப்படும் பத்திரிக்கையாளர்களுக்கு,அங்கு நடக்கும் கலவரத்தையும்,நிலையையும் காண அனுமதிக்கும் அரசு, கஷ்மீரிலுள்ள பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அடையாள அட்டைகளை ரத்து செய்ததை தேச மற்றும் சர்வதேச ஊடக அமைப்புகள் கண்டனம் செய்துள்ளன.

கஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று கூடிய கஷ்மீர் செய்தியாளர்கள் சங்கத்தின் குலாம் ஹசன் கலூ, கஷ்மீர் பிரஸ் கில்ட் அமைப்பின் பஷீர் அகமது, கஷ்மீர் பத்திரிக்கையாளர் படையின் தலைவர் இஸ்ஃபாகுல் ஹாசன், கஷ்மீர் புகைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் பரூக் ஜாவேத், வீடியோ பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தாரிக் ஆகியோர் அரசின் கட்டுப்பாட்டை கடுமையாக கண்டித்துள்ளனர்.





இஸ்ரேலின் அணு ஆயுத கொள்கை மீதான தனது நிலைப்பாட்டை அமெரிக்கா தெளிவுபடுத்த வேண்டும்௦௦- அஹ்மதி நிஜாத்

Posted: 10 Jul 2010 03:33 AM PDT

அபுஜா:ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டம் குறித்து பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னதாக இஸ்ரேலின் அணு ஆயுதத் கொள்கை மீதான தனது நிலைப்பாட்டை அமெரிக்கா தெளிவுபடுத்த வேண்டியது அவசியமென ஈரானிய அதிபர் மஹ்மூத் அஹமதி நிஜாத் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,மேற்குலக சக்திகளால் விதிக்கப்பட்டுள்ள தடைகள் ஈரானின் அணுநிகழ்ச்சித் திட்டத்தின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நைஜீரியத் தலைநகர் அபுஜாவில் நடைபெற்ற அபிவிருத்தியடைந்து வரும் 8 நாடுகளின் அமைப்பான டி8 உச்சிமாநாட்டின் பின்னர் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த அஹமதி நிஜாத்,பேச்சுகளுக்கு ஈரான் ஆதரவு வழங்குவதாகவும் ஆனால்,முந்தைய பேச்சுகள் தோல்வியடைந்தமைக்கு அமெரிக்காவே காரணமெனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு என்ன நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டுமெனக் கருதுகிறீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அஹமதி நிஜாத்; 'இஸ்ரேலின் அணுவாயுதம் மீதான தமது நிலைப்பாட்டை அமெரிக்கா தெளிவுபடுத்த வேண்டுமென்பதே எங்களது முதலாவது நிபந்தனை.

அவர்கள் அணுவாயுதங்களை வைத்திருப்பதற்கு அமெரிக்கா இணங்கினால் பேச்சுகள் வேறுவிதமாக முன்னெடுக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மட்டுமே அணுவாயுத வல்லமையைப் பெற்றிருப்பதாகப் பரவலாகக் கருதப்படுகின்ற போதும் இதனை இஸ்ரேல் இதுவரை உறுதிப்படுத்தவோ அல்லது நிராகரிக்கவோ இல்லை. அத்துடன், அணுவாயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இஸ்ரேல் இதுவரை கையெழுத்திடவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஈரான் அணுகுண்டுகளைத் தயாரிக்க முயற்சிப்பதாக மேற்குலக நாடுகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் சக்தித் தேவையை நோக்கமாகக் கொண்டதே தங்களது அணுநிகழ்ச்சித் திட்டமென ஈரான் கூறிவருகிறது.

ராய்ட்டர்ஸ்




இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவோரை தண்டிக்க புது சட்டம்

Posted: 10 Jul 2010 03:26 AM PDT

சென்னை:பேச்சுரிமை என்ற போர்வையில் வெளிநாட்டு பிரச்சனையை மையப்படுத்தி மத்திய,மாநில அரசுகளுக்கு எதிராகவும்,இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசுபவர்களை தண்டிக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் விடுமுறை கால குடும்ப நல நீதிமன்ற துவக்க விழா இன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசுகையில்,

தமிழ்நாட்டில் சில பேர் வெளிநாட்டு பிரச்சனையை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும்,இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேச்சுரிமை என்ற போர்வையில் பேசி வருகிறார்கள்.அத்தகைய நபர்களை தண்டிக்க தற்போது சட்டங்கள் உள்ளன.ஆனாலும் அத்தகைய நபர்கள் இனி புதிய சட்டத்தையும் சந்திக்க வேண்டும்.இவர்களை தண்டிக்க விரைவில் கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என்றார் துரைமுருகன்.





பெண் அதிகாரியுடன் கைகுலுக்க மறுத்த முஸ்லிம் இளைஞருக்கு பிரெஞ்சு குடியுரிமை நிராகரிப்பு

Posted: 10 Jul 2010 03:19 AM PDT

பெண் அதிகாரியுடன் கைகுலுக்க மறுத்ததன் காரணமாக மொராக்காவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கு பிரெஞ்சு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது.

மொராக்காவைச் சேர்ந்த இந்த இளைஞர் கடந்த 1999ம் ஆண்டு முதல் பிரான்சில் வசித்து வருகிறார்.இவர் 2004ம் ஆண்டு பிரெஞ்சுப் பெண்னை திருமணம் செய்து கொண்டார்.

பிரெஞ்சு தேசிய நீரோட்டத்துடன் கலக்க மறுத்துவிட்டதாகவும், பெண்களுடன் பாரபட்ச போக்கை மேற்கொண்டதாகவும் இவரைப் பற்றி பிரெஞ்சு அமைச்சரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு குடியேற்ற அமைச்சரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தன்னுடைய மதத்திற்கு எதிரானது என்பதால் அரசு அலுவலகத்தில் உள்ள பெண் அதிகாரியுடன் கைகுலுக்க மறுத்துவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

அவருடைய மனைவி முழு நீள அங்கி அணிந்திருந்ததாகவும், பெண்கள் மட்டும் உள்ள தனி அறையில் மட்டுமே தன்னுடைய ஆடையை களைய முன்வந்ததாகவும் அந்த செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.





பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 19 பேர் பலி

Posted: 09 Jul 2010 09:30 PM PDT

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட மனித குண்டுத் தாக்குதலில் பொதுமக்கள் 19 பேர் கொல்லப்பட்டனர். 80 பேர் காயமடைந்தனர்.

வடமேற்கு பகுதியில் உள்ள யாககுந்த் என்ற கிராமத்தில் உள்ள முக்கியமான அரசு அலுவகத்துக்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

சக்தி வாய்ந்த குண்டுகளை மடியில் கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதி அரசு அலுவலகம் முன்பகுதியில் மோதி வெடித்துச் சிதறினார். இதில் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த மக்களில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் இறந்தனர்.

தாக்குதல் நடந்த இடத்துக்கு அருகில் முக்கியமான சந்தையும், அரசு அலுவலகங்களும் உள்ளன. இத்தாக்குதலில் கடைகள் சில இடிந்து விழுந்ததாகவும், இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெஷாவரில் உள்ள அரசு மருத்துவமனையில் மட்டும் காயமடைந்த நிலையில் 54 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக அந்த மருத்துவமனை கண்காணிப்பாளர் ரஹீம் அப்ரிதி தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.





பெங்களுர் குண்டுவெடிப்பு வழக்கு: மதானியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Posted: 09 Jul 2010 09:23 PM PDT

பெங்களுர்:பெங்களுர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முன் ஜாமீன் கோரிய கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியின் மனுவை பெங்களுர் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

2008 ஜூலை 25-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நசீர் உள்ளிட்டோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதானி உள்பட 6 பேர் மீது பெங்களூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதை அடுத்து அவரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே முன்ஜாமீன் வழங்குமாறு விரைவு நீதிமன்றத்தில் மதானி தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை நீதிபதி ஸ்ரீகாந்த் வடவடகி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மதானி தரப்பு வழக்கறிஞர் உஸ்மான் மற்றும் அரசு வழக்கறிஞர் ருத்ரசாமி ஆகியோர் வாதாடினார்கள். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை மேலோட்டமாகப் பார்க்கும்போது முன்ஜாமீன் வழங்க அவசியம் இல்லை எனக்கூறி மதானியின் மனுவை டிஸ்மிஸ் செய்தார்.





முழு முகமாற்று அறுவை சிகிச்சை - ஃபிரான்ஸ் டாக்டர் சாதனை

Posted: 09 Jul 2010 09:16 PM PDT

பாரிஸ்:விபத்தில் சிக்கி முகம் சிதைந்த நிலையில் உள்ள வர்களுக்கு முகமாற்று ஆபரேசன் செய்யப்பட்டு வருகிறது.முகத்தில் சிதைந்த பாகங்கள் மட்டும் அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் மறு சீரமைக்கப்படுகிறது. ஆனால், முகம் முழுவதையும் மாற்றும் வகையில் முழு முகமாற்று அறுவை சிகிச்சை பிரான்சை சேர்ந்த டாக்டர் லாரண்ட்லான் டியரி செய்து சாதனை படைத்துள்ளார்.

மரபணு கோலா நினால் முகத்தில் பாதிப்பு ஏற்பட்ட 35 வயது வாலிபர் ஒருவர் டாக்டர் லாரண்ட் லான்டியரிடம் சிகிச்சைக்காக வந்தார். முகம் முழுவதும் அகோரமாக இருந்த அவரை டாக்டர் லாரண்ட் குழுவினர் பாரிஸ் புறநகர் பகுதியில் உள்ள எளுன்ரி மாண்போர் ஆஸ்பத்திரியில் வைத்து முகமாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.

இதற்கு முன்பு நாயினால் கடித்து குதறப்பட்ட ஒரு பெண்ணின் மூக்கு, வாய், தாடை உள்ளிட்ட பகுதிகளை இக்குழுவினர் முகமாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

ஆனால் தற்போது கண் இமை,கண்ணீர் நாளம் போன்றவற்றிலும் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதற்கு முன்பு யாரும் இது போன்ற அறுவை சிகிச்சை செய்தது இல்லை. இது தான் உலகிலேயே முதன் முதலாக நடத்தப்பட்ட முழு முக அறுவை சிகிச்சை ஆகும்.

இந்த ஆபரேசனை வெற்றிகரமாக நடத்தி முடிக்க சுமார் 12 மணி நேரம் ஆனது. இது டாக்டர் லாரண்ட்லாண்டி நடத்தப்பட்ட 12-வது முகமாற்று அறுவை சிகிச்சை ஆகும்.





7/11 மும்பை இரயில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: குற்றவாளியை அடையாளம் காண்பதில் முக்கிய சாட்சிகள் தோல்வி

Posted: 09 Jul 2010 09:15 PM PDT

மும்பை கடந்த ஜூலை 7,2006 மும்பை ரயில் தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய சாட்சியான சுனில் குமார்,குற்றம் சுமத்தப்படுள்ள டாக்டர் தன்வீர் அன்சாரியை அடையாளம் காண்பதில் தோல்வியுற்றார்.

அதேப்போல,மற்றொரு சாட்சியான மேஹுள் சிங்க் அன்சாரியை அடையாளம் காணும்போது,போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் செய்கையில் சிங்கிற்கு அன்சாரியை காட்டியதை தொடந்து நீதிமன்றத்தில் சிறது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டிராவல் ஏஜெண்ட் நிறுவனத்தை நடத்தும் அனில் குமாரிடம், கடந்த 2006ல், சீருடை அணியாத போலீசார் அவரின் அலுவலகத்திற்கு தன்வீருடன் வந்து, தன்வீரின் முகமறைப்பு அகற்றப்படாத நிலையில் பாஸ்போர்டை வாங்கிச் சென்றுள்ளனர்.

நான்கு வருடத்திற்குப் பிறகு,நீதிமன்றத்தில் அதே பாஸ்போர்ட்டை உறுதிசெய்ய முடிந்த குமாரால் டாக்டர் தன்வீரை அடையாளம் காட்ட இயலவில்லை.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு,நான்கு ஐந்து ஆண்டுகள் கழிந்துவிட்டதால், தன்வீர் யார் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று குமார் ஒப்புக்கொண்டார்.

முன்னதாக தான் கூறிய வாக்குமூலத்தை,போலீசார் ஒரு போதும் வாசிக்கவோ அல்லது படித்தோ காட்டியது கிடையாது என்றும் குமார் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மற்றொரு சாட்சியான மேஹுள் சிங்க் அன்சாரியை எப்படி தீவிரவாதி என்று உறுதிசெய்ததை விவரித்தார்.

அன்சாரி, தான் பணிபுரியும் மருத்துவமனையில் 3 பாட்டில்களில் ரசாயனத்தை பதுக்கிவைத்திருந்ததாகவும்,அதை பின்னர் போலீஸ் கைபற்றியதாகவும் மேஹுள் சிங்க் தெரிவித்தார்.

நீதிபதி அவரிடம் தன்வீரை அடையாளம் காட்டச் சொன்னபோது,சிங்க் தினறியதால், பார்வையாளர்களில் அமர்த்திருந்த ஒரு மனிதர் செய்கைமூலம் தன்வீரை காட்ட, தன்வீர் இதைச்சுட்டிக்காட்டி வீரியத்துடன் நீதிபதியிடம் முறையிட்டார்.

பின்னர் நீதிமன்றத்தில் தன்னை போலீஸ் கான்ஸ்டபிள் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அம்மனிதரை மேஹுள் சிங்க் மற்றும் தன்வீர் உறுதி செய்தனர். வழக்கின் வாதங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

இவ்வழக்கை ஜமாஅத்-இ-உலமா ஹிந்த் நடத்திவருகிறது.குற்றம் சாட்டப்பட்டுள்ள 13 முஸ்லிம்களுக்காக, மொகாஷி, பிரகாஷ் ஷெட்டி, வஹாப் கான், ஹசன் மொமின் மற்றும் காலித் ஆஸ்மி ஆகிய ஐந்து வக்கீல்களை கொண்டு அந்த அமைப்பு போராடுகிறது.





துளசிராம் வழக்கில் ராஜஸ்தான் டி.ஜி.பி.யின் உதவியை நாடும் குஜராத் போலீஸ்

Posted: 09 Jul 2010 08:54 PM PDT

ஜெய்பூர்:துளசிராம் போலி என்கவுண்டர் வழக்கில் தொடர்புடைய அதிகாரிகளை விசாரணை செய்ய உதைபூர் சென்ற குஜராத் போலீஸ் குழு அவர்கள் தலைமறைவானதால் வெறும் கையோடு திரும்பியுள்ளது.

இதையடுத்து ராஜஸ்தான் டி.ஜி.பி., மீனாவை இவ்வழக்கில் உதவுமாறு கடிதம் மூலம் குஜராத் போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையடுத்து குஜராத் மாநிலம் உதைபூரை சேர்ந்த 4 போலீஸ் அதிகாரிகளை தலைமறைவானவர்கள் என்று குஜராத் கிரைம் பிரான்ஞ்ச் போலீஸ் அண்மையில் அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் இவ்வழக்கில் அவர்களை விசாரிக்க குஜராத் போலீஸ் உதைபூர் சென்றபோது, அவர்கள் தலைமறைவாகிட்டதாக கூறப்படுகிறது.

பலமுறை சம்மன்கள் அனுப்பியும் பதில் இல்லாததால்,இவர்களை காணாமல்போனவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

ராஜஸ்தான் டி.ஜி.பி க்கு குஜராத் போலீஸ் எழுதியுள்ள அக்கடிதத்தில், அவர்கள் தங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் நான்கு இடங்களை போலீசார் தெரிவித்துள்ளனர்.





சி.பி.ஐ விசாரணைக் கோரும் ஸாதிக் ஜமால் போலி என்கவுண்டர் வழக்கு

Posted: 09 Jul 2010 08:35 PM PDT

அஹ்மதாபாத்:2003 குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின் இதுவரை சுமார் 24 போலி என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஷொராஹ்ப்தீன், அவர் மனைவி கவுசர் பீவி, இஸ்ரத் ஜகான், துளசிராம் ஆகிய பிரபல போலி என்கவுண்டர் மட்டும் தான் பெரும்பாலானோருக்கு தெரியும்.

2003ம் ஆண்டு குஜராத் போலீசாரால் நடத்தப்பட்ட ஸாதிக் ஜமால் என்கவுண்டரை மிக குறைவானோரே அறிவர்.

கடந்த செவ்வாய்கிழமையன்று, இவ்வழக்கைத் துரிதப்படுத்துமாறும், சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கக் கோரியும் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸாதிக் ஜமாலின் அண்ணன் ஷபீர் ஜமால் மேஹ்தா என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவில், செப்டம்பர் 2009 க்குப் பிறகு இவ்வழக்கு முகவரியே இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், ஆதலால் இவ்வழக்கை சி.பி.ஐ. வசம் மாற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இவ்வழக்கை துரிதப்படுத்தக் கோரியுள்ள அவர், 2008ல் சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் ஒப்புக்கொண்டும், இதுவரை இவ்வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் கூறியிருந்தார்.

முன்னதாக,ஜனவரி 2003ல் ஸாதிக் ஜமால்(25) போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இவருக்கு தாவூத் இப்ராஹிமுடனும், சோட்டா ஷகீலுடனும் தொடர்பு இருப்பதாகவும், மோடி, அத்வானி, தொகாடியா உள்ளிட்ட பல தலைவர்களை ஜமால் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் வழக்கம் போல காரணங்கள் கூறப்பட்டன.

மனுதாரரின் கூற்றுப்படி, தன் தம்பி ஸாதிக் ஜமால் தீவிரவாதியில்லை என்றும், கொல்லப்படுவதற்கு முன் ஏற்கனவே போலீசாரின் பாதுகாப்பில் தான் அவர் இருந்துள்ளதாகவும்,ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டரில் தற்போது சிறையில் இருக்கும் டி.ஜி. வன்சாரா மற்றும் குஜாராத் கலவரத்தில் கலவரக்காரர்களை ஏவிவிட்ட பாண்டே ஆகிய அதிகாரிகளின் சதிச் செயல்களினால் தான் ஜமால் கொல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இவ்வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

TOI




மதுரை மாநகரில் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடும் காவல்துறையை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம்

Posted: 09 Jul 2010 08:43 AM PDT

மதுரை மாநகரில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் மீது காவல்துறை போட்டுக் கொண்டிருக்கும் அப்பட்டமான பொய் வழக்குகளுக்கு ஒரு அளவே இல்லாமல் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றது.

மதுரை மாநகர் செல்லூரில் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடன் பிறந்த சகோதரர்களான 3 முஸ்லிம் இளைஞர்கள் மீது ஐ.பி.சி 302 செக்ஷனில் மதுரை மாநகர காவல்துறை பொய்வழக்கு பதிவு செய்தது.

அதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக்கூடிய நெல்பேட்டை பகுதியில் முஸ்லிம் இளைஞர்கள் மீது தொடர்ந்து பொய்வழக்கு போட்டுக் கொண்டிருக்கின்றது.

கடந்த 5.7.10 அன்று தென்காசி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தங்களுடைய வழக்கு வாயிதாவில் ஆஜராகிவிட்டு, காலை உணவு சாப்பிடுவதற்காக நெல்பேட்டை காயிதேமில்லத் பகுதியில் உள்ள ஒரு முஸ்லிம் ஹோட்டலுக்கு வந்த அந்த இளைஞர்கள் மீது மதுரை டவுன் காவல்துறை உதவி ஆணையாளர் வெள்ளைத்துரை மற்றும் விளக்குத்தூண் சிறப்பு சார்பு ஆய்வாளர் முத்துகுமார் ஆகியோர் பொய் வழக்கு புனைந்துள்ளனர்.

முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டிய மதுரை மாநகர் காவல்துறை ஒரு சார்பு தன்மையுடனும் பாரபட்சமாகவும் நடந்து முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளால் ஒவ்வொரு நாளையும் மதுரை வாழ் முஸ்லிம்கள் பாதுகாப்பு உணர்வற்று ஒருவித பயத்துடனேயே கழித்து வருகின்றார்கள்.

முஸ்லிம்கள் மீது மதுரை மாநகர காவல்துறை தொடர்ந்து புனைந்து வரும் பொய் வழ்க்கிற்கெதிராக போராட, சமுதாய நலனில் அக்கறையுள்ள முஸ்லிம் பெரியவர்கள், முஸ்லிம் இயக்கங்கள் ஆகியவை ஒன்றிணைந்து "முஸ்லிம்கள்
மீதான பொய் வழக்கிற்கெதிரான கூட்டமைப்பு" என்ற ஒரு பொதுவான கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,ஜம்இய்யிதுல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்(JAQH), சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI), இந்திய தவ்ஹீத் ஜமாத், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம், NCHRO, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்(NWF) ஆகியவை இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

இக்கூட்டமைப்பின் சார்பாக ஏ.சி. வெள்ளைத்துரை மற்றும் விளக்குத்தூண் ஸ்பெஷல் எஸ்.ஐ. முத்துக்குமார் மற்றும் உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும்,மேற்படி பொய் வழக்கை வாபஸ் பெறுமாறும் கோரி இன்று (9/7/10) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு நெல்பேட்டை அண்ணாசிலை அருகில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.முஹம்மது நஸ்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற 12/7/2010 திங்கட்கிழமை அன்று தென்மண்டல ஐ.ஜி மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரை சந்தித்து மனு அளிப்பது எனவும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.முஹம்மது நஸ்ருதீன் தெரிவித்தார்.







கேரள பேராசிரியர் மீதான தாக்குதல்: PFI மீது புகார் - சுதந்திரதின அணிவகுப்பை தடுக்கும் மறைமுக யுக்தி

Posted: 09 Jul 2010 06:29 AM PDT

கொச்சி:இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிம்கள் சங்கடப்படும்படி வினாத்தாள் எழுதி சமீபத்தில் தாக்கப்பட்ட பேராசிரியர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது புகார் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக PFI நடத்திவரும் சுதந்திரதின அணிவகுப்புக்கு அனுமதியளிப்பதை போலீஸ் மறுபரீலனை செய்யலாம் என்றும் கருதப்படுகிறது.

டி.ஜி.பி ஜேக்கப் புன்னூஸ், "சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் பயந்தால் சுதந்திரதின அணிவகுப்பு தடுக்கப்படலாம், இவ்விஷயத்தில் போதுமான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் நேற்று கூறியுள்ளார்.

PFI கடந்த சில ஆண்டுகளாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடகாவின் பல நகரங்களில் சுதந்திரதின அணிவகுப்பை நடத்திவருகிறது.

PFI க்கு எதிராக குற்றச்சாட்டுகளையும், கட்டுக்கதைகளையும் பரப்புவதை போலீஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், PFI தலைவர் வீட்டில் ஆபாச பட சிடிக்கள், தேசவிரோத ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுவது தவறு என்றும் மாநில பொதுசெயலாளர் பி.அப்துல் ஹமீது கூறியுள்ளார்.

போலீஸின் இத்தகைய மனிதஉரிமை மீறல்கள் பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிறது. முஸ்லிம் சமுதாயத்தையும், PFI போன்ற பிரபல அமைப்புகளையும் அச்சமூட்டுவதற்காகவே போலீஸ் இப்படி செய்கிறது.

PFI யின் எர்ணாகுளம் மாவட்ட செயலாளர் குன்னத்தேரி மன்சூர் வீட்டிலிருந்து அவருடைய பாஸ்போர்ட், குர்ஆன் மொழிபெயர்ப்பு சிடிகள், தொலைபேசி புத்தகத்தை மட்டுமே எடுத்துச் சென்றுவிட்டு போலீஸ் வதந்திகளை பரப்புவதாக கூறுகிறார்.

PFI யின் அரசியல் கட்சியான SDPI வரும் செப்டம்பர் மாதம் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் இந்த சூழல் பெரும்சவாலாக அமையும் என்று கருதப்படுகிறது.

No comments: