Thursday, August 12, 2010

உன் திருப்தியில்....

அனுப்பி வைத்துவிட்டீர்கள்

அரபு நாட்டிற்கு;

எந்திர உலகத்தில்

உன்னைப் போல் எவருமில்லை



உருகி உருகிப் பார்ப்பதற்கு!!







அம்மை நோய் வந்த நாள்;

அன்று நான் நொந்த நாள்;

எல்லோரும் அருகில் இருந்தும்

எவரும் இல்லாமல் நான்!




மச்சான்! மாப்பிளே!

என்று உறவாடியவர்களின் முகத்தில்

இன்று எத்தனை சுருக்கம் – அவர்கள்

மனமெல்லாம் இறுக்கம்!



உடல் உஷ்ணம் அம்மை வந்தது

மன உஷ்ணம் அம்மா ஞாபகம் வந்தது!





ஒரு பருக்கை இருந்தாலும்

உடைத்து கொடுப்பாயே;



படுத்தப் பின்னும்

பாதி இரவில் போர்த்தி விடுவாயே!







பாசம் மட்டும்

பஞ்சுமெத்தையாய் நான்



படுக்க இனி எப்போது காலம்;



உன் கரம் பிடித்து

கதறி அழு வேண்டும் நாளும்!!







என்னைக்

கடித்த கொசுவை நீ



விரட்டி விரட்டி அடித்தக் கதை மறக்காது;



என் முகம் சுழித்தாலும்

உன் முகம் மலர மறுக்காது!!







வற்றாத சுரபி உன் பாசக் கிணறு;



வள்ளல் நபி வழிக் காட்டுதல்

தாயை மறப்பது தவறு!







மும்முறைக் கேட்டப் போதும்

முதல் உரிமை அன்னைக்குதான்;



உன் திருப்தியில் நான் சுவனம் செல்வேன்



அன்றைக்குத்தான் (இன்ஷா அல்லாஹ்)

No comments: