Thursday, August 12, 2010

காலாவதியாவதற்கு முன்....

கடல் கடந்து என்




கரம் சேர்ந்து இருக்கும் உன்

கடிதம்!







அழிந்த எழுத்துகளும் உன்



அழுகைதான் காரணம் என

சொல்லாமல் சொல்ல;



கனத்த இதயமோ



ரணமானது மெல்ல!!







வழியில்லாமல்

வளைகுடாவில் நானும்;



விதியே என வீட்டிற்குள் நீயும்!







என் சொந்தங்களை கரையேற்ற



உன் சோகம் பணயமாக



பயணம் வந்தேன்

பாலைவனத்திற்க்கு!







என்னோடு சேர்ந்து

இன்னுமொரு கூட்டம்



வலியோடு இருந்தாலும்



வாய் விட்டு சிரிப்போம்!







கலகலப்பாக

கட்டிலுக்கு சென்றாலும்



கணப் பொழுதில்



கனமாகும் நெஞ்சம்;







உன் நினைவோடு

கனவுக்கு காலடிவைத்தாலும்



அங்கேயும் நீ கேட்பது என்னவோ

என் விடுமுறையைப் பற்றிதான்!!







பசியோடு இருந்தாலும் என்

பக்கத்தில் நீ வேண்டும்;



நடத்தியதுப் போதும் குடும்பம் பாலையோடு



முடித்துவிட்டு வந்துவிடு நாளையோடு என்று!







வெகுளியாய் உன் கையெழுத்திற்கு முன்



வெறுப்பாய் என் கண் முன்னே வெளிநாடு;



காலத்தோடு வந்துவிடுகிறேன்

காலாவதியாவதற்கு முன்னே

வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை



காலம் போனப் பின்னே!

No comments: