Thursday, August 12, 2010

எப்போது விடுமுறை?

ஆளுக்கு ஒரு மூலையில் இருந்தாலும்




என் மூளையில் இருப்பதென்னவோ நீதான்!







தொடமுடியாத தூரத்தில் நீ



தொட்டுப் பார்க்கும் என் விரல்கள் உன் கடிதத்தை!!







நிழாலாய் உன்



நினைவுகள் - இங்கே



கனவுகளோடு



காலம் தள்ளும் உன்



கணவன்!







இருக்க இடம் எங்கே என்று நீ கேட்க ;



படுப்பதற்க்கு மட்டுமே இடம் என்று நான் உரைக்க



பதறிப் போனாய் நீ!







குடும்பத்தோடு இருந்தும்



தனிமையாய் நீ அங்கே;



குடும்பத்திற்காகவே தனிமையாய்



நான் இங்கே!!







அருகில் வரவே



இனிப்புகள் இலஞ்சமாய்



என் குழந்தைக்கு;



வாங்கவும் மறுக்கிறான்



வரவும் மறுக்கிறான்;







வெடித்துப் போய்



விளக்கம் கேட்டால்;



கத்திச் சொன்னான்



அடிப்பாள் அம்மா



கண்டவரிடம் வாங்கினாள்!







வரும் உன் அழைப்பையும் துண்டித்து விட்டு



கூடவே கொஞ்சம் கண்டித்துவிட்டு



பேசக் கூட நேரமில்லை என்று



வேலையில் நான்;



கண்ணீரோடு கனைத்துவிட்டு



மெதுவாய் நீ கேட்பாய்;



எப்போது விடுமுறை என்று!!











இப்படி



மலறும் நினைவுகளோடு



கதறும் உள்ளம்;



சுடும் கண்ணிரோ



என் தலையணையை நனைக்க



முடிவெடுத்துவிட்டேன் இனி



போதாது எனக்கு ஒரு தலையணை என்று!!

No comments: